Tuesday, November 15, 2011

விடியலை தேட்டி நட..!


படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே
கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப்பகை தொடவரில் கொதியுறும்
அனலென எமதிடையே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே
தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி விண்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே
தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
அடிதர வருமவர் அதைவிட உடனிடு
அதைவிட ஒருசெயலே
படுபடு கிடகிட எனவுடல் சரிந்திட
அயர்வுடன் உறங்கிடவே
துடிதுடி என அவன் கொலையிட உறவுகள்
கொடுமையில் வதைபடுமே
விடிவிடி எனவரும் விடியலும் உனதிரு
விழிகளில் தெரிந்திடுமே
அதுவரை விடுவிழி திறஒரு இரவதும்
இலையுன தருகினிலே
சடசட எனஅடி சிறகொடு பறவைகள்
திரிவது உயர்வினிலே
திடமொடு உனதரு கடமையும் குறிதனும்
நிலகொளும் மனதுயர்வே
கடகட எனவருங் கடமைகள் தனை முடி
பெறுவது தமிழரசே
அதுவரை உனதரும் இதயமும் துடிகொள்ளு
விடுதலை கொடுஎனவே

1 comment: