உலகம் திருந்த வேண்டும் என்று
பலவிதமாய் பேசுறோம் !
சுலபமாக்க வேண்டும்
என்று
சுற்றி சுற்றி வருகிறோம் !
உலகில் உண்மை இல்லை என்று
ஊரைக் குத்தம்
சொல்லுறோம் !
பாரைப் பார்த்து பாழ்மனதை
பாழாக்கிக் கொள்ளுறோம்
!
உழைத்து உழைத்து
உண்மை பேசி
தன்னை திருத்திக் கொண்டாலே
தானாய் தரணி
திருந்தி விடும்
தந்தை சொன்னார் என்னிடம் !
எந்தை சொல்லில் உள்ள
உண்மை
விந்தை உலகில் விரித்திட்டேன் !
கந்தை கட்டிக் கொண்ட
மாந்தர்
வெறும் காலில் நடந்து செல்லுறார் !
காரில் செல்லும்
மக்களோ
குளிர் போதவில்லை என்கிறார் !
மாற்றம் வேண்டும் மண்ணிலே
!
சமத்துவத்தை சொந்த மண்ணில்
சமைக்க வேண்டும் சாரமாய் !
அதற்கு
தன்னை
திருத்தி கொள்ளவேண்டும்
தானாய் மாறும் தரணியும் !
தன்னை பெற்ற
மனிதரை
தினமும் வணங்க வேண்டுமே!
குழந்தை தவறு செய்திட்டால்
குரைக்க
வேண்டாம் வேகமாய் !
திருக்குறளை உவமை சொல்லி
திருத்தவேண்டும் தண்மையாய்
!
பாய்க்கு மட்டும் மனையில்லை !
தாயாய் கண்டு வணங்கிடு !
தூய்மை வீட்டில்
வேண்டுமே !
தினமும் குளிக்க வேண்டுமே !
குளித்த பின்னர் சிறிது
நேரம்
கும்பிட்டு வணங்குவோம் !
தியானம் யோகம் பிராணாயாமம்
திரையில்
காட்டும் பொருளல்ல !
மனதில் அமைதி சிறிது போதும்
பணத்தில் வருமோ பக்குவம்
?
பிறர் தன்னை திட்டினாலும்
கண்ணால் முறைத்து பார்க்காமல்
அமைதி தன்னை
ஆழ்மனதில்
அழகாய் விதைக்க வேண்டுமே !
பழக தெரிய வில்லை இவர்க்கு,
பார்த்து
இரக்கப்படுகிறார் என்று
பாதி உடல் சொன்னாலும்
பழக்கம் அதை
மாற்றாமல்
இரக்கம் மனதில் வேண்டுமே !
தரையில் எவரும் பகையில்லை !
கரையில்
கொள்கை வாராது !
இரையைத்தேடி தின்றாலும்
பிராணிகள் தன்னினத்தை தின்னாது
!
மனிதன் மட்டும் மண்ணிலே
தன்னினத்தை தாழ்த்துறான் !
தனிமனிதன் தன்னை
மாற்றி
கனிவை உள்ளம் கொண்டிட்டால்
இனிமையாக அமையும் வாழ்வு !
பனி மலையும்
உருகிடும் !
துன்பம் அது வருகையில்
திரையில் காணும் படமென
மனதில் உறுதி
கொண்டிடு !
இன்பம் இனிதாய் வருகையில்
சமமாய் பாவம் கொண்டிடு !
பேசி பேசி
பொழுதை போக்கி
நாசமாக வேண்டுமோ ?
தினமும் சிறிது நேரத்தை
மெளனமாக
கழித்திடு !
மெளனமாக இருக்கையில்
மனதை உள்ளே நோக்கிடு !
“எந்தன் இயல்பு
என்னது ? பிறரை
சொந்தமாக நினைக்கிறேனா ?
இல்லை சுமை எனவே எண்ணமா ?
கஷ்டம்
பிறர் படுகையில்
கடவுள் நினைப்பு வருகுதா இல்லை
கஷ்டம் வேண்டும்
அவருக்கு
என்ன ஆட்டம் போட்டிட்டான் என
மனதில் எண்ணம் வருகுதா
?”
இப்படி
தினமும் சிறிதுநேரம் தன்னை
தன்னை பற்றி
நினைத்திட்டால்
விண்ணைத் தாண்டி உலகத்தில்
திண்ணமாக உயரலாம் !
தன்னை
திருத்திக் கொள்ளலாம் !
தானாய் உலகம் திருந்திடும் என
தந்தை சொன்ன
பொருளதை
சிந்தையிலே கொள்ளுவேன் !
ஊழல் இந்த உலகிலே என
உரக்க குரல்
கொடுக்கும் முன்
பரபரக்கும் என் மனதை
பார்த்து பார்த்து மாற்றுவேன்
!
பத்து ரூபாய் நோட்டுக்காக
பொய்யை சொல்லும் பழக்கத்தை
போக்கி நின்று
பழகுவேன் !
அக்கறையாய் அன்னை தந்தை
அனைவரையும் நோக்குவேன் !
நமக்கும்
வயது ஆகிடும் !
நோய்கள் நம்மை முழுங்கிடும் !
அதனால்
வயது முதிர்ந்த
வேர்களை
வணக்கம் சொல்லி வாழ்த்துவேன் !
பணமும் காசும் போய்விடும்
!
பழக்கம் ஒன்றே நிலைத்திடும் !
தழதழக்க தாயிடம்
தினமும் கொஞ்சி பேசுவேன்
!
தந்தை சொல்லும் கருத்தினை
தவறாமல் பழகுவேன் !
மனைவி அவளும் மனுஷிதான்
!
மனதினிலே கொள்ளுவேன் !
பிள்ளை அவனை பேசி பேசி
பழக்கிடுவேன் நல்லதில்
!
அத்தை பாட்டி அக்கா அண்ணா
உத்தமர்தான் அனைவரும்
உண்மை மனதில்
கொள்ளுவேன் !
குறையாய் எதையும் கூறாமல்
குற்றம் என்ன என்னிடம்
சித்த
நேரம் எண்ணுவேன் !
என்னை திருத்தி கொண்டிட்டால்
எந்தன் வீடு திருந்திடும்
!
எந்தன் வீடு திருந்திட்டால்
பந்தசொந்தம் திருந்திடும் !
சொந்தமெலாம்
திருந்திட்டால்
சூழ்ந்த ஊரும் திருந்திடும் !
சூழ்ந்த ஊரும்
திருந்திட்டால்
வாழும் நாடு திருந்திடும் !
நாடும் உலகும்
திருந்திட
நானும் இன்று திருந்துவேன் !
என் மனதை தினமும்
நோக்கி
பக்குவமாய் மாற்றுவேன் !
எந்தன் மனது மாறினால்
எல்லாம் இங்கே
மாறிடும் !
கல்லை எறிந்தால் குளத்திலே
களக்கம் வரும் அதனாலே
ஆழமிகுந்த என்
மனதை
அமைதியதில் ஆழ்த்துவேன் !
பகைமை தன்னை போக்கியே
தகைமை தண்மை
ஆக்குவேன் !
சிகையை அலங்கரிப்பதில்
சீராய் உலகம் ஆகுமோ?
சிந்தை தன்னை
மாற்றினால்
விந்தை உலகு விளங்கிடும் !
எந்தை சொன்ன பொருளினை
இன்று
உணர்ந்து கொண்டிட்டேன் !
உலகம் மாறி விட்டது !
உண்மை உணர்வில் வந்தது
!
நாளை நன்றாய் விடிந்திடும் !
நம்பிக்கை வந்தது !
அம்பிகையைப்
பணிந்திட்டேன் !
வம்பு தும்பு அகன்றது !
கம்பு கழியை சுற்றாமல்
கனிவாய்
மனது ஆனது !
பணிவாய் நடந்து கொள்ளுவேன் !
மனமே உனக்கு சொல்லுறேன்
!
மாறிவிடு இக்கணம் !