Tuesday, November 15, 2011

அர்த்தமற்ற வார்த்தை

அப்பாவும் அம்மாவும்
கவனிப்பாரற்று காலத்தைக்கடத்துகிறார்கள்
அடிப்படை வசதியுமற்ற
என்
கிராமத்தில்!

எனக்கிணையானவளும்
வெளியிலும் சொல்லமுடியாமல்
வெட்கி
வெட்கி
சோகத்தில் கழிக்கிறாள்
தன்
விடியாத இரவுகளை !

வாரிசுகளும்
நாலு இடம் அழைத்துச்செல்ல
நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர
ஆளின்றி
புழுங்கி
புழுங்கி
நகர்த்துகிறார்கள் நாட்களை !

எனக்கும் எவருமில்லை
இந்த
அந்நிய மண்ணில்
இருந்தும்
வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன்
“நான்
குடும்பக்காரன்'

No comments:

Post a Comment