Tuesday, November 15, 2011

நம்பிக்கை


நம்பிக்கை கொண்டே நாளுமெழு
நல்லதென எல்லாம் நினவில் வை
சிதராத காரியமாற்ற நம்பிக்கையேதுணை
தீராப்பகை யெனினும் தீயதெண்ணாதே
தீமைகொள்ளும் சிலரையும் சீராக்கு
நம்பிக்கை கொண்டே நாளும் செல்
உன்னில் நீ உன்னைக்காண நம்பிக்கைகொள்
வின்னும் வசப்படும் வளமாய்வாழ‌
இருகண்ணென கடமையில் நம்பிக்கை வை
மனிதனின் மிகப்பெரிய செல்வமென
நம்பிக்கைகொள் அதுவே உனது செல்வம்
நம்பிக்கை உன்னுள் மனதில் வேண்டும்
உலகத்தில் நீ பிறந்ததிலிருந்து விட்டுசெல்லும்வரை
உனது சொத்தே ந‌ம்பிக்கையதை களவு செய்யயியலாது
தன்மீது நம்பிக்கைக் கொண்டோரெல்லாம் சாதனையாளர்

No comments:

Post a Comment