Tuesday, November 15, 2011

தனிமை தீவில்


தனிமை தீவில்
தத்தளிக்கும் மனதில்
ஆயிரம் அலைகள்
அத்தனையும் வலிகள்...
நேற்றைக்கும் இன்றைக்கும்
நீள்கின்ற பொழுதில்
உதைபந்தாய் நினைவுகள்
அங்குமிங்கும் ஓடியபடி...
அன்றியும் யோசிக்கின்றேன்
அனாதை இதயமாய்
ஒற்றை கல்மேல்
தனிமை தவமிருந்து...
மலர்தூவிய நிமிடங்கள்
முட்கிரீடமாய் சிரசில்
பட்டாம்பூச்சி பறந்த
மனதில் கீறல்கள்...
வெளிச்சக் கீற்றின்
பிரகாச பக்கங்கள்
இருண்டு மங்கியபடி
இறுதி யாத்திரையில்...
இலையுதிர்த்து விதவையான
மொட்டை மரங்கள்
வெறுமை போதிக்கும்
தத்துவ ஞானிகள்...
வீழ்தலும் கரைதலும்
வாழ்க்கையின் அங்கம்
எழுதலும் பிரகாசித்தலும்
மாற்றத்தின் அங்கம்...
அடிகால்களின் கட்டுகள்
அத்தனையும் அறுபடும்
இருட்டை துடைத்தெரிந்து
வெளிச்சம் தூவப்படும்...
தூரத்தெரியும் நம்பிக்கை
துணிவை தருகிறது
வாழ்வில் ஒளிபூக்கும்
வசந்தம் மறுபிறவியெடுக்கும்...

No comments:

Post a Comment