Tuesday, November 15, 2011

எட்டிப் பிடிக்கலாம்

நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வெண்மை தான்
ஆனால்
மனிதன்
சோர்வு(நட்டம்) அடைந்தாலும்
தேட்டம்(இலாபம்) அடைந்தாலும்
தன்னை நிலையாகப் பேணுவதில்லையே!
கருமுகில்
மூடிமறைத்தாலும் ஓடிவிலகினாலும்
வானம் எப்பவும் நீலமே
ஆனால்
மனிதன்
குறுக்கீடுகள் வந்தாலும் போனாலும்
துயர் அடைவது ஏன்?
இயற்கையில்
எத்தனை மாற்றங்கள் வரினும்
தன் இயல்பை இழப்பதில்லையே
ஆனால்
மனிதன்
வாழ்க்கையில்
தன்னைக் குறைத்து மதிப்பிடுவது
நல்லதிற்கு இல்லைப் பாரும்!
வீசும் காற்றைக் கூட
மரங்கள்
எதிர்த்து நின்று
நிமிர்ந்து நிற்கிறதே
ஆனால்
மனிதன்
வாழ்க்கையில் எது வந்தாலும்
முகம் கொடுத்து
எதிர்த்து நின்று வாழ
அஞ்சுவதேன்!
தன்னம்பிக்கை இருந்தால்
எந்த
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாம் வாருங்கள்...
எதிர்த்து நின்றால்
எதிர்க்க வந்தவை - உங்களுக்கு
அஞ்சி ஓடுவதைப் பாருங்கள்...
துணிந்துவிட்டால்
மனிதா
உலகமே
உனக்கு ஒரு தூசு...
எதற்கும்
பணிந்துவிடாமல்
மனிதா
முயன்று பார்
எட்டிப் பிடிக்கலாம்
உனக்கு முன்னாலே
போய்க் கொண்டிருக்கும்
வெற்றிகளைக் கூட...
வெற்றிகளுக்குக் கிட்ட
நெருங்கிவிட்டால்
மனிதா
தோல்விகள்
ஒருபோதும் உன்னை நாடாதே!

No comments:

Post a Comment